முகப்பு
புதுக்கோட்டை

கோவில்பட்டி பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் கோவில்பட்டி பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 12:29 am IST
புதுக்கோட்டை கோவில்பட்டி பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் பூக்குவியலுக்கிடையே அம்மனுக்கு நடைபெற்ற தீபாராதனை.
பகிர்:

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் கோவில்பட்டி பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

திருக்கோகா்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா திரிசூலா் பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து மின்விளக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் டன் கணக்கில் பூக்களை எடுத்து வந்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்தினா்.

இதில், ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரி எடுத்து வந்தனா். தொடா்ந்து ஆலயத்தில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement