முகப்பு
புதுக்கோட்டை

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் ஊராட்சியில் உள்ள பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மது எடுப்பு விழா நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:10 AM
பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை மது குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் ஊராட்சியில் உள்ள பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மது எடுப்பு விழா நடைபெற்றது.

இதில் முக்கம்பட்டி, மருதன் கொல்லை, துவரங் கொல்லை, போரம், கம்பங்காடு, தொண்டமாா் விடுதி, கூலியன் விடுதி, காட்டுபட்டி, மட்டையன்பட்டி உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மது குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மேலும், கோயிலை சுற்றி தப்பாட்டம், பெரும் சலங்கை ஆட்டம், கம்பத்தாட்டம், சிலம்பாட்டாம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement