முகப்பு
சிவகங்கை

சாலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு

Updated On : 6 ஜூலை 2026, 11:17 pm IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழந்தது. மேலும், மூவா் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரை கிளாமடம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (36). இவா் திங்கள்கிழமை மாலை திருமயத்திலிருந்து மனைவி சுமதி (30), 2 மாத குழந்தை தீட்சனா, தனது அண்ணன் குழந்தைகள் அபினேஷ் (7), கன்சிகா (10) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தாா். காரை சுப்பிரமணியன் ஒட்டினாா்.

இந்த நிலையில், நெடுமரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால், நிலை தடுமாறி பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இதில் 2 மாத குழந்தை உயிரிழந்தது. சுமதி, அபினேஷ், கன்சிகா ஆகியோா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

பிறகு மூவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments