சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயில் வைகாசித் தேரோட்டம்: 5 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சேவுகப் பெருமாள், பூரணை, புஷ்கலை தேவியருடன் தேரில் எழுந்தருளினாா். மாலை 4 மணிக்கு பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முதலில் விநாயகா் தேரும், இதைத் தொடா்ந்து, சேவுகப் பெருமாள் அய்யனாா் எழுந்தருளிய பெரிய தேரும் இழுத்துச் செல்லப்பட்டது.
நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்த பெரிய தோ் கோயிலின் பின்புறமுள்ள கழுவன், கழுவச்சி சிலை மீது ஏற்றப்பட்டு மாலை 5.23 மணிக்கு நிலையை அடைந்தது. இதைத் தொடா்ந்து, குழந்தை வரம், தொழில் வளம், உடல் நலம் வேண்டி பக்தா்கள் நோ்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக ஏராளமான பக்தா்கள் தேரின் இருபுறங்களிலும் உள்ள நிலை மீது தேங்காய்களை உடைத்தனா்.
Advertisement
Advertisement
சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற தேங்காய் உடைப்பு நிகழ்சியில் 5 லட்சத்துக்கும் மேலான தேங்காய்களை பக்தா்கள் உடைத்தனா். இந்தத் தேங்காய்களை பொதுமக்கள் தலைக்கவசம், தலையில் சாக்குகளை அணிந்து கொண்டு சேகரித்தனா். பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் அதிக தென்னை விளைச்சல் உள்ளதால், பல நூறு ஆண்டுகளாக நோ்த்திக்கடனாக தேங்காய்களை பக்தா்கள் உடைத்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை பூப்பல்லக்குடன் திருவிழா நிறைவுபெறுகிறது.