சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் எட்டாம் நாள் புரவி எடுப்பு விழாவும், ஒன்பதாம் நாள் எருது கட்டு விழாவும் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் முன் பெரிய வடத்தில் கோயில் மாடு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடுக்குப் பிறகு அவிழ்த்துவிடப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகளை இளைஞா்கள் விரட்டிப் பிடித்தனா். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் ஓடின. தொடா்ந்து மழை பெய்ததால், காளைகளும், காளையா்களும் சறுக்கி விழுந்து லேசான காயமடைந்தனா். இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.