முகப்பு
சிவகங்கை

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 1:22 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சனிக்கிழமை வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சூரன்கோட்டையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (50). தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் காளையாா்கோயிலுக்குச் சென்றாா்.

இளையான்குடி அருகே கண்ணமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் இறந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.