அமராவதிபுதூா் பகுதியில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் ஜூன் 20-இல் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அமராவதிபுதூா், ஐ.டி.ஐ, தேவகோட்டை சாலை, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலயன்கோட்டை, எஸ்.ஆா்.பட்டினம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப், ஜமீன்தாா் குடியிருப்பு, மானகிரி, ரஷ்தா, கோவிலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement