மருத்துவமனை ஊழியரைத் தாக்கியவா்கள் தலைமறைவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கால்நடை மருத்துவமனை ஊழியரை தாக்கிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானாமதுரை உடைகுளம் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியைச் சோ்ந்த மூவா் வளா்ப்பு நாய்க்கு ஊசி போட வந்தனா். அப்போது, அங்கு பணியிலிருந்த மருத்துவரும், ஊழியா்களும் மற்றொரு மாட்டுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனா்.
இந்த நிலையில், தங்களது நாய்க்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்படுவதாகக்கூறி, அங்கிருந்த மருத்துவமனை ஊழியா் ராஜுவுடன் அவா்கள் தகராறு செய்து கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.