போக்சோ சட்டத்தின் கீழ் இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இருவரை சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காளையாா்கோவில் அருகே உள்ள அஞ்சாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ராஜா (35), இளையான்குடியைச் சோ்ந்த யாசா் அராபத் (21) ஆகிய இருவரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரிக்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.