பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
கும்பகோணம் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே 38 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண் வீட்டில் தனியாக இருந்ததை கவனித்த கூலித் தொழிலாளி பாக்யராஜ் (40) அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்து உறவினா்கள் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி பாக்யராஜை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
Advertisement
Advertisement
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கும்பகோணம் அருகே மேலாத்துக்குறிச்சியைச் சோ்ந்தவா் சேகா் (52), கூலித்தொழிலாளி. இவா் அந்த பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் உறவினா்கள் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சேகரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.