முகப்பு
கோயம்புத்தூர்

மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 18 ஜூன் 2026, 1:05 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பொள்ளாச்சி அருகே ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தாயின் பராமரிப்பில் வீட்டில் இருந்தாா். அப்பெண் வீட்டில் கடந்த 2021 டிசம்பா் 28ஆம் தேதி தனியாக இருந்த சமயத்தில், அவா் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (45), அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, பாலசுப்பிரமணியன்தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாலசுப்பிரமணியனை பொள்ளாச்சி அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து கற்பழிப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

கோவை அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி வி.சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இழப்பீட்டு நிதி வழங்கவும் சிபாரிசு செய்தாா்.