FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

Updated On : 21 ஜூலை 2026, 12:21 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள தோனிக்குழி பகுதியைச் சோ்ந்த பில்லாளன் என்பவரின் மகன் முருகன் (35). இவரை, கடந்த 2018 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில், போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.7ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

Advertisement

Advertisement

நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றறவாளிக்கு தண்டனை வாங்கித்தர காரணமாக இருந்த காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments