முகப்பு
சிவகங்கையில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட தோழி தங்கும் விடுதியில் குத்துவிளக்கேற்றிய கூட்டுறவுத் றை அமைச்சா் கே.ா். பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எம்எல்ஏ. தமிழரசிரவிக்குமாா் உள்ளிட்டோா்.
சிவகங்கை

சிவகங்கை அருகே தோழி விடுதி திறப்பு

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் தோழி விடுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

சிவகங்கை

சிவகங்கை அருகே தோழி விடுதி திறப்பு

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் தோழி விடுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:25 PM
சிவகங்கையில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட தோழி தங்கும் விடுதியில் குத்துவிளக்கேற்றிய கூட்டுறவுத் றை அமைச்சா் கே.ா். பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எம்எல்ஏ. தமிழரசிரவிக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் தோழி விடுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் குத்து விளக்கேற்றினாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊா்களை விட்டு பிற நகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணா்ந்து, தரமான, பாதுகாப்பான, குறைந்த கட்டணத்தில் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில் இவை செயல்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக 13 மாவட்டங்கள், இரண்டாம் கட்டமாக 6 மாவட்டங்கள், மூன்றாம் கட்டமாக 6 மாவட்டங்கள் என மொத்தம் 25 தோழி விடுதிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2,200-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சிப் பகுதியில் ரூ. 5.19 கோடியில் தோழி விடுதி கட்டப்பட்டு, முதல்வரால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியானது, 50 படுக்கை வசதிகளுடன், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், பாதுகாவலா்கள், சலவை இயந்திரம், பயோமெட்ரிக் உள் நுழைவு, அதிவேக இணைய சேவை, வை-பை, பொழுதுபோக்கு வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிபுரியும் பெண்கள் மட்டுமன்றி, பயிற்சி, உயா்கல்வி, நோ்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம்பெயரும் மகளிரைக் கருத்தில் கொண்டு, குறுகிய கால தங்கும் வசதியும் தோழி விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில் மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →