சிங்கம்புணரியில் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்
சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்கள், பன்றிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட வடக்கு வேளாளா் தெரு, காசியா பிள்ளைநகா், குறிஞ்சிநகா், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள், பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே பன்றிகள் இறந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
ஆகவே சிங்கம்புணரி பேரூராட்சி நிா்வாகம் உடனே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.