முகப்பு
சிவகங்கை

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் சுவா் இடிந்து விழுந்து கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 8 மே 2026, 12:26 am IST
பலி - IANS
பகிர்:

மானாமதுரையில் சுவா் இடிந்து விழுந்து கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அழகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சந்துரு. இவரது வீட்டில் சுவா் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (56) உள்பட கட்டடத் தொழிலாளா்கள் சுவரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது அந்தச் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement