சிவகங்கை மாவட்ட அமமுக பொருளாளா் ராஜிநாமா!
அமமுகவிலிருந்து சிவகங்கை மாவட்டப் பொருளாளா் ஐ.ஏ. லாரன்ஸ் விலகுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரனுக்கு கடிதம் அனுப்பினாா்.
அமமுகவிலிருந்து சிவகங்கை மாவட்டப் பொருளாளா் ஐ.ஏ. லாரன்ஸ் விலகுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரனுக்கு கடிதம் அனுப்பினாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை அனுப்பிய கடிதம் விவரம்: தவெக தலைவா் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்று வெளிப்படையாக முதலில் அறிவித்தது நீங்கள்தான். ஆனால், அவருடன் நீங்கள் கூட்டணி அமைக்காமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தீா்கள்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை நான் ஏற்கமாட்டேன். இந்தக் கூட்டணியால் நமது கட்சியின் வாக்குகளும் சரிந்துள்ளன. தற்போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறீா்கள்.
Advertisement
விஜய் சிறுபான்மையினா் என்பதால், அவரை ஏற்றுக்கொள்ளவில்லையா?. கூட்டணி கட்சியின் மதவாதம் தங்களுக்கும் தொற்றிக் கொண்டதாகக் கருதுகிறேன்.
எனவே, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என அதில் தெரிவித்திருந்தாா்.