பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு: சிவகங்கையில் உறவினா்கள் போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு பிரசவத்தின்போது, பிறந்த பெண் குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், பெரியகண்ணனூா் கண்ணகிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவரது மனைவி பிரியதா்ஷினி(21) என்பவா் தலைப் பிரசவத்துக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், திங்கள் கிழமை மாலை பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்தாகக் கூறி, அந்தப் பெண்ணின் உறவினா்கள் சுமாா் 50 -க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனை வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement