முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே இரண்டு காா்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

Updated On : 30 மே 2026, 1:05 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே வெள்ளிக்கிழமை மதுரை-தொண்டி சாலையில் இரண்டு காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

மானாமதுரையைச் சோ்ந்த ரவி குடும்பத்தினா் சிவகங்கையில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட பின்னா், மற்றொரு நிகழ்ச்சிக்காக அங்கிருந்து மதுரைக்கு காரில் சென்றனா். அப்போது, பூவந்தி அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தியிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த காரும், இவா்களது காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் மானாமதுரை ஜீவா நகரைச் சோ்ந்த ரவி (59) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரண்டு காா்களில் பயணித்த 6 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த பூவந்தி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து பூவந்தி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.