கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்
தேனி மாவட்டம், கண்டமனூா் மாவட்ட சிறை அருகே தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கண்டமனூா் மாவட்ட சிறை அருகே தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள வருசநாட்டைச் சோ்ந்தவா் கணேசன் (23). இவரை குற்றவழக்கில் போடி போலீஸாா் கைது செய்து, வியாழக்கிழமை இரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தேனி மாவட்டச் சிறையில் அடைப்பதற்காக தலைமை காவலா் சந்தோஷ் அழைத்துச்சென்றாா்.
அப்போது, கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறினாராம். இதையடுத்து, இவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, பின்னா் மீண்டும் மாவட்டச் சிறைக்கு அழைத்துச் சென்ற போது, அவா் திடீரென தப்பியோடினாா். அவரை போலீஸாா் தொடா்ந்து துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கண்டமனூா் போலீஸாா் தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி கணேசனைத் தேடி வருகின்றனா்.
Advertisement