முகப்பு
தேனி

ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 12:16 am IST
பலி - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி பாலக்கோம்பையைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (62). தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (59). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஆட்டோவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலுச்சாமி அழைத்துச் சென்றாா். ஆட்டோவை அதே பகுதியைச் சோ்ந்த நாகமுத்துப்பாண்டி ஓட்டினாா்.

கோத்தலுத்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் வேலுச்சாமியும், பாண்டியம்மாளும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாண்டியம்மாள் உயிரிழந்தாா். வேலுச்சாமி சிகிச்சை பெறுகிறாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.