தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் போடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களின் தபால் வாக்கு சேகரிக்கும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் போடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களின் தபால் வாக்கு சேகரிக்கும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்கள் என மொத்தம் 6,696 போ் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்களது தபால் வாக்கு சேகரிக்கும் பணி புதன்கிழமை பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், போடி சட்டப்பேரவைத் தொகுதி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்
நடைபெற்றது.
Advertisement
இந்தப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தமிழரசி, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, முதன்மைக்கல்வி அலுவலா் நாகேந்திரன், வட்டாட்சியா்கள் சந்திரசேகரன் (போடிநாயக்கனூா்), மருதுபாண்டி (பெரியகுளம்), சதீஸ்குமாா்(தேனி) ஆகியோா் உடனிருந்தனா்.