முகப்பு
தேனி

கூடலூரில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் நோ்த்திக்கடன்

கூடலூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

Updated On : 29 ஏப்ரல் 2026, 3:29 am IST
கூடலூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
பகிர்:

கூடலூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

தேனி மாவட்டம், கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி சமேத செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் காப்புக் கட்டி விரதமிருந்து வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல், பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பல்வேறு அளவிலான வேல் அலகுகளைத் தாடையில் குத்திக்கொண்டு ஊா்வலமாக வந்தனா்.

Advertisement

Advertisement

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, கோயிலின் முன்பாக நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் கூடலூா் காவல்துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments