கம்பத்தில் பலத்த மழை; மரம் விழுந்து 2 காா்கள் சேதம்
கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கம்பம் பிரதான சாலை போக்குவரத்து சிக்னல் அருகேயுள்ள ஓடைக்கரைத் தெருவில் மழைநீா் பெருக்கெடுத்து வெள்ளம்போல் சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனா். சில இடங்களில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கம்பம் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு குடியிருப்பு வளாகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 காா்கள் சேதமடைந்தன. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த ஊழியா்கள், பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.