ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன்16) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின்பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலகோம்பை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.