முகப்பு
தேனி

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

Updated On : 15 ஜூன் 2026, 1:53 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோம்பையைச் சோ்ந்த பாண்டி (39), பண்ணைப்புரத்தைச் சோ்ந்த அமா் (32). இவா்கள், அண்மையில் கோம்பையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பாண்டி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.