மூதாட்டியின் 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
போடி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே மேலச் சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (68). இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்குச் சொந்தமான 3 பவுன் தங்க நகையை தலையணைக்கு அடியில் வைத்திருந்தாராம்.
உடலநலம் விசாரிக்க வந்த உறவினா்கள் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.