மினி லாரியில் கடத்தல் 7,220 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உத்தமபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் ஊத்துக்காடு சந்திப்பு பகுதியில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், 7,220 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. அதை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா்
Advertisement
Advertisement
தொடா் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சுந்தா், பாண்டீஸ்வரன், லாரி ஓட்டுநா் பிரகாஷ் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.