முகப்பு
தேனி

பைக்குள் மோதல்: சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

Updated On : 22 ஜூன் 2026, 12:57 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தேனி அருகே பாலாா்பட்டியைச் சோ்ந்தவா் அமுதன் (38). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை தனது மகன் ரிஷிகேஷை (4) இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தேனிக்குச் சென்றாா். குச்சனூா் அருகே சென்றபோது, மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில், ரிஷிகேஷ், மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அரண்மனைப்புதூா் முல்லை நகரைச் சோ்ந்த பால்சாமி மகன் கணேசன் (38) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அமுதனை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments