முகப்பு
தேனி

வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 7 மே 2026, 3:09 am IST
பலி - IANS
பகிர்:

ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனூரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் பாலமுருகன் (25). கூலித்தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு ஆண்டிபட்டிக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திம்மரநாயக்கனூருக்கு திரும்பினாா்.

தனியாா் பொறியியல் கல்லூரி அருகே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாலமுருகன் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அப்போது, செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments