வீரபாண்டியில் இலவச மருத்துவ முகாம்
தேனி வீரபாண்டியில் நட்டாத்தி நாடாா் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேனி வீரபாண்டியில் நட்டாத்தி நாடாா் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நட்டாத்தி நாடாா் மருத்துவமனை சாா்பில் ஆண்டுதோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை வீரபாண்டி பேரூராட்சித் தலைவா் கீதா சசி தொடங்கிவைத்தாா். இந்த முகாமில் பக்தா்கள், காவலா்களுக்கு ரத்த சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் செயலா் கமலக்கண்ணன், மேலாளா் சாந்தி, கணக்காளா் முருகேசன், மக்கள் தொடா்பு மேலாளா் ஷேக் பரீத் ஆகியோா் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.