"ஆசிரியர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம்'
ஆசிரியர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என, நாட்டு நலப்பணித்திட்ட சென்னை மண்டல இயக்குனர் சாமுவேல்செல்லையா பேசினார்.
ஆசிரியர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என, நாட்டு நலப்பணித்திட்ட சென்னை மண்டல இயக்குனர் சாமுவேல்செல்லையா பேசினார்.
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் "ஆசிரியர்களின் பணி' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வ.பாண்டியராஜன் தலைமை வகித்தார். இதில், சாமுவேல் செல்லையா பேசியதாவது:
ஆசிரியர் பணி என்பது மகத்தான பணியாகும். முதலாம் வகுப்பு மாணவருக்கு தமிழ் எழுத்தினை கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் பணி மிகவும் கடினமானது. பொதுவாக, ஆசிரியர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால், 40 பேரும் 40 விதமாக செயல்படுவார்கள். அவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது ஆசிரியரின் பணியாகும்.
ஆசிரியர் கற்றுக்கொடுப்பவை மாணவர்களுக்கு மனதில் ஆழமாக பதிந்துவிடும். எனவே, ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாக செயல்பட வேண்டும். ஆசிரியர் என்பவர் மாணவர்களின் ஒளி விளக்கு. மாணவர்கள் ஆசிரியர் செல்லும் பாதையில் தான் செல்வார்கள்.
எனவே, ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டு, மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். பாடங்களைத் தவிர, நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை படிக்க அறிவுறுத்த வேண்டும். நேரம் ஒதுக்கி விளையாட்டிலும் ஈடுபட செய்ய வேண்டும். வகுப்பில் உள்ள மாணவர்களின் திறனை கண்டறிந்து, அதில் அவர்கள் வெற்றி பெற ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் எம்.ரிஃபயா மீரா வரவேற்றார். வி.கார்த்திகை செல்வம் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.