முகப்பு
விருதுநகர்

பட்டாசு தீப்பற்றியதில் தாய், மகன் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கழிவு பட்டாசு தீப்பற்றியதில் தாயும், மகனும் காயமடைந்தனர்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:17 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கழிவு பட்டாசு தீப்பற்றியதில் தாயும், மகனும் காயமடைந்தனர்.
  சாத்தூர் அருகே வெற்றிலையூரணியை சேர்ந்தவர் பாலம்மாள் (40). இவருடைய மகன் பொன் கார்த்திக்ராஜா (16) செவ்வாய்கிழமை இரவு, தனது வீட்டில் இருந்த பழைய பாட்டாசுகளை அப்புறபடுத்திக் கொண்டிருந்தாரம்.  அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொன்கார்த்திக்ராஜா, அவரது தாய் பாலம்மாள் ஆகியோர் காயமைடந்தனர்.  காயமடைந்த இருவரும்  மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.