பட்டாசு தீப்பற்றியதில் தாய், மகன் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கழிவு பட்டாசு தீப்பற்றியதில் தாயும், மகனும் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கழிவு பட்டாசு தீப்பற்றியதில் தாயும், மகனும் காயமடைந்தனர்.
சாத்தூர் அருகே வெற்றிலையூரணியை சேர்ந்தவர் பாலம்மாள் (40). இவருடைய மகன் பொன் கார்த்திக்ராஜா (16) செவ்வாய்கிழமை இரவு, தனது வீட்டில் இருந்த பழைய பாட்டாசுகளை அப்புறபடுத்திக் கொண்டிருந்தாரம். அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொன்கார்த்திக்ராஜா, அவரது தாய் பாலம்மாள் ஆகியோர் காயமைடந்தனர். காயமடைந்த இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.