சிவகாசி மகளிர் கல்லூரியில் கணித ஆராய்ச்சி மாநாடு
சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி கணிதத் துறையின் சார்பில் கணிதம் தொடர்பான ஆராய்ச்சி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி கணிதத் துறையின் சார்பில் கணிதம் தொடர்பான ஆராய்ச்சி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் திலகவதிரவீந்திரன் தொடக்கி வைத்தார். மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கணிதத் துறை பேராசிரியை ஆர்.கமலா, புதுச்சேரி பல்கலைக் கழக கணிதத்துறை பேராசிரியர் எஸ்.ஆர்.கண்ணன், சேலம் பெரியார் பல்கலைக் கழக கணிதத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் பேசினர். இதில் 12 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னதாக இணைப் பேராசிரியர் சி.பெத்தனாட்சி செல்வம் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் அ.மைதீன் பீபீ நன்றி கூறினார்.
ஏற்பாட்டினைத் துறைத் தலைவர் ரோஸ்லின் ஞானகுமாரி செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.