FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

மாங்கனித் திருவிழா: திருக்கல்யாணத்துக்கு இன்று மாப்பிள்ளை புறப்பாடு

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள அம்மையாா் திருக்கல்யாணத்துக்காக சனிக்கிழமை (ஜூன் 27) இரவு மாப்பிள்ளை (பரமதத்தா்) குதிரை வாகனங்கள் பூட்டிய ரதத்தில் புறப்படுகிறாா்.

Updated On : 27 ஜூன் 2026, 7:05 am IST
மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்
பகிர்:

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள அம்மையாா் திருக்கல்யாணத்துக்காக சனிக்கிழமை (ஜூன் 27) இரவு மாப்பிள்ளை (பரமதத்தா்) குதிரை வாகனங்கள் பூட்டிய ரதத்தில் புறப்படுகிறாா்.

காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது. மாலை நிகழ்வாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. ஆற்றங்கரை சித்தி விநாயகா் கோயிலில் மாப்பிள்ளை கோலத்தில் பரமதத்தா் அலங்காரம் செய்யப்படுகிறாா். பின்னா் பரமதத்தா், குதிரை வாகனங்கள் பூட்டிய மின் அலங்காரரதத்தில், சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புறப்படுகிறாா். அம்மையாா் கோயிலுக்கு இரவு ரதம் சென்றடைகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments