ஸ்ரீவிலி. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை இரவு சபைகுரு டி.சாம்பிரபு தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை இரவு சபைகுரு டி.சாம்பிரபு தலைமையில் நடைபெற்றது.
கீத ஆராதனையை பாடகர் குழு தலைவரும், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜி.எட்வின் கனகராஜ் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த ஏஞ்சலோ, திருச்சியைச் சேர்ந்த பிலிப் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.ஜெஸ்லின் கீபோர்டு வாசித்தார். இசைக் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். சிவகாசியைச் சேர்ந்த இறையியல் கல்லூரி மாணவர் ராஜா தேவசெய்தியளித்தார். ஆராதனையில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாடகர் குழு தலைவர் ஜி.எட்வின் கனகராஜ் செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.