விருதுநகர்

மாடியில் இருந்து தவறி விழுந்துபெண் தொழிலாளி பலி

DIN

ராஜபாளையத்தில் கட்டட வேலை பாா்த்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மனைவி ஜானகி (65). இவா் கட்டட வேலையில் சித்தாளாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தென்காசி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டட வேலையின் போது ஜானகி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளாா். உடனடியாக அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT