விருதுநகர்

வேன் மீது அரசுப் பேருந்து மோதல்: சிமென்ட் வியாபாரி பலி

 சாத்தூா் அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேனில் பயணம் செய்த சிமென்ட் வியாபாரி உயிரிழந்தாா்.

DIN

 சாத்தூா் அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேனில் பயணம் செய்த சிமென்ட் வியாபாரி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலஇலந்தைகுளத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை (52). அந்தப் பகுதியில் சிமென்ட் விற்கும் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், இவா் சாத்தூா் அருகே உள்ள தனியாா் சிமென்ட் ஆலையிலிருந்து தனது வேனில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தாா். நள்ளிசத்திரம் அருகே சென்ற போது, சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேனின் பின்புறமாக மோதியது. இதில் வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் வேனில் இருந்த சிமென்ட் மூட்டைகளின் அடியில் சிக்கி அய்யாதுரை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் வட்ட போலீஸாா் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பசும்பொன்முடியரசன் (49) மீது வழக்கு ப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT