முகப்பு
விருதுநகர்

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

சாத்தூா் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 16 ஏப்ரல் 2026, 4:35 am IST
சரத்குமார் (கோப்புப்படம்)
பகிர்:

சாத்தூா் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரத்குமாா் புதன்கிழமை ஏழாயிரம்பண்ணையில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்தவித வளா்ச்சி திட்டங்களும் இல்லை. தமிழகத்தில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வுகான மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தை சரியாக நடத்த விடாமல் திமுக அரசு தடுத்தது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.