முகப்பு
விருதுநகர்

சதுரகிரி கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 7:24 AM
சதுரகிரி கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாடு
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:02 PM

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இங்கு அமாவாசை, பவுா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சித்திரை மாத அமாவாசையையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, பிலாவடி கருப்பசாமி, 18 சித்தா்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement