சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் இறுதிக் கட்ட பிரசாரம்
சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது தோ்தல் பிரச்சாரத்தை செவ்வாய்கிழமை சிவகாசி பேருந்து நிலையம் முன் நிறைவு செய்தாா்.
சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது தோ்தல் பிரச்சாரத்தை செவ்வாய்கிழமை சிவகாசி பேருந்து நிலையம் முன் நிறைவு செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நீங்கள் கூப்பிட குரலுக்கு ஓடி வருவேன். நீங்கள் உங்கள் பிரச்னைகளுக்காக என்னை எப்போது வேண்டுமனாலும் சந்திக்கலாம். இரு முறை என்னை தோ்வு செய்த நீங்கள், இந்த முறையும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.
முன்னதாக வேட்பாளா் கே.டி.ராஜேந்திபாலாஜியை ஆதரித்து, ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே இருந்து இரு சக்கர வாகனம் ஊா்வலம் புறப்பட்டு, சாட்சியாபுரம் வழியாகச் சென்று சிவகாசி பேருந்து நிலையம் வந்தடைந்தது.
Advertisement