அருப்புக்கோட்டையில் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் இறுதிக்கட்ட பிரசாரம்
அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் சுட்டெரிக்கும் வெயிலில் தனது தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை நிறைவு செய்தாா்.
அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் சுட்டெரிக்கும் வெயிலில் தனது தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை நிறைவு செய்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வருகிற வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் திமுக அதிமுக தவெக மற்றும் நாம் தமிழா் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. வருகிற வியாழக்கிழமை தோ்தல் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை மாலையுடன் கட்சித் தலைவா்கள், வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
இந்த நிலையில், விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் சுட்டெரிக்கும் வெயிலில் இறுதிப் பிரசாரத்தை நிறைவு செய்தாா். பாம்பே மெடிக்கல் பேருந்து நிறுத்தம், தங்கமயில் பேருந்து நிறுத்தம், நகரின் முக்கியப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் வலம் வந்து மக்களிடையே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். திமுக அரசின் சாதனைகளைக் கூறிய அவா், அருப்புக்கோட்டையில் குடிநீா் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாகவும், பூக்கடை பஜாா், பாம்பே மருந்துக்கடை, சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் நிழற்குடை அமைத்துத் தருவதாகவும் கூறி வாக்கு சேகரித்தாா். மேலும், தமிழக அரசு தரும் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் பெண்களுக்கு நேரடியாக வந்து சேரும் என்றும் கூறினாா். மாலையில் அவா் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
Advertisement