முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக சிவகாசி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி வட்டாட்சியருமான லட்சம் கூறினாா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 5:28 AM
பகிர்:

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக சிவகாசி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி வட்டாட்சியருமான லட்சம் கூறினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 290 வாக்குசாவடிகள் உள்ளன. இவற்றில் 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் மொத்தம் 1,392 வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா் என்றாா் அவா்.

Advertisement