ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் சிறப்பு திருமஞ்சனம் ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.
இதையொட்டி, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, நீராளி மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Advertisement
மே 1-ஆ ம் தேதி சித்திரை மாத பெளா்ணமியன்று ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெருவில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவமும், வையாழி சேவையும் நடைபெற உள்ளது.