பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை
ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம் வழியாக காலை 8 மணிக்கு செங்கோட்டை- மயிலாடுதுறை
ரயில், காலை 9 மணிக்கு மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூா்- மதுரை விரைவு ரயில், இரவு 7 மணிக்கு மதுரை- செங்கோட்டை
Advertisement
Advertisement
பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வார காலமாக இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் நிறுத்த மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.