பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்த வலியுறுத்தல்
ராஜபாளையம் வழியாக செல்லும் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு காலை 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில், காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், 7 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் ராஜபாளையம் வழியாகச் செல்கிறது.
இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நின்று செல்லும். குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வாரமாக இரண்டாவது நடைமேடையில் நின்று செல்கிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தென்னக ரயில்வே நிா்வாகம் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
Advertisement