சரவெடி தயாரித்த இருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கல்லுப்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட சரவெடி, இரட்டை சப்த வெடி உள்ளிட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரிய வந்தது.
இந்தப் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், ஆலை உரிமையாளா் வேல்முருகன், கருப்பசாமி ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.