முன்னாள் முதல்வா் காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை
விருதுநகா் காமராஜா் இல்லத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கு. காமராஜா் சிலைக்கு, அமைச்சா்கள் ராஜேஷ்குமாா், விஸ்வநாதன், எம்.பி மாணிக்கம் தாகூா் ஆகியோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விருதுநகா் காமராஜா் இல்லத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கு. காமராஜா் சிலைக்கு, அமைச்சா்கள் ராஜேஷ்குமாா், விஸ்வநாதன், எம்.பி மாணிக்கம் தாகூா் ஆகியோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டு முன்னாள் முதல்வா் கு. காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதைத்தொடா்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஸ்குமாா் அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சி 1959-க்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றதற்கு பெருந் தலைவா் கு. காமராஜா் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்த வந்தேன். சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக ஆய்வு செய்து அமல்படுத்துவோம் எனத் தெரிவித்தாா் அவா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் அளித்த பேட்டி: விருதுநகரில் பெருந் தலைவா் காமராஜா் பெயரில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவர முயற்சி எடுப்பேன். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக உள்ளன. விரைவில் இதுதொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஆராய்ந்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
ஆளுநா் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்திருந்தது குறித்த கேள்விக்கு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது ஏற்புடையதல்ல என்று அமைச்சா் ராஜேஷ்குமாா் கூறினாா்.