முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் விஏஓ காயம்

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 1:47 am IST
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

சாத்தூா் அருகே நத்தபட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (42). இவா், பந்தல்குடியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். தனது மனைவி காளிஸ்வரி, குழந்தைகளுடன்வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கோவிந்தராஜ் திங்கள் கிழமை அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் சென்றுவிட்டு, பின்னா் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுசாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அவருக்குப் பின்னால் அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கோவிந்தராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து கோவிந்தராஜின் தம்பி திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், பந்தல்குடிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தையும், ஓட்டுநரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.