சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஒரு இளைஞா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இளைஞருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்த மற்றொரு இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த விபத்து குறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.