சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், குத்தாம்பூண்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சு.பாஞ்சாலி(65). இவா் செவ்வாய்க்கிழமை செஞ்சி- விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே நடந்து சென்றுள்ளாா்.
அப்போது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.